திமுக, பாஜக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
திமுக, பாஜக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸின் கை சின்னத்தின் கீழ் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இன்று அவர் தனதுவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்டஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல்செய்தார்.
இதேபோல, திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் எல்.கணேசன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்மணிவாசகனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மேயர்சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.
திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திரனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரனிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
பெரம்பலூரில் திமுக வேட்பாளர் ராஜாவும், சிவகாசியில் தொகுதியில் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறைரவிச்சந்திரனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தென்காசி தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அப்பாதுரை,நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவாலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையிலும், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இன்று அமாவாசை தினம் என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்பு மனுத் தாக்கல்செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications