For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோஷ்டிகளின் ரோதனை!

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

கோஷ்டிப் பூசலால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும்காங்கிரஸ் வேட்பாளரும், கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான இளங்கோவன் வேதனையுடன்கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு எதிராக முக்கிய கோஷ்டி நடத்தி வருகிறார் இளங்கோவன். அவருக்குவாசன் தரப்பு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. இதனால் கோபியில் தனது கட்சியினரின் எதிர்ப்பை சமாளித்துக்கொண்டே அதிமுகவின் சவாலை எதிர்கெண்டுள்ளார் இளங்கோவன்.

இந் நிலையில் கோபியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் குறித்துவெளிப்படையாகப் பேசினார் இளங்கோவன். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் இருப்பதுஉண்மைதான். காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் இதெல்லாம் சாதாரண ஒன்று.

இருப்பினும் தேர்தல் நேரத்தில் கோஷ்டி மோதல் வெளிப்பட்டால் அது கட்சியின் ஒற்றுமை, பலத்தைக் குலைத்துவிடும். எனவே இப்போது கோஷ்டி மோதல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சந்தடிசாக்கில் மதவாத சக்திகள் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விடும் என்றார் இளங்கோவன்.

கோஷ்டி பூசலா.. இல்லையே: வாசன்

ஆனால், தமிழக காங்கிரசில் கோஷ்டிப் பூசல் மறைந்து விட்டது என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் கூறினார்.

வேலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமராக வருவதற்கு காங்கிரஸ் மற்றும் அதைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் முயற்சி எடுத்துவருவதைக் கட்சியினர் நன்கு அறிவர். கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்த பின்பு, பூசல்களை மறந்து அவர்களின்வெற்றிக்காக நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்படுகிறார்கள் என்றார்.

வாசன் கோஷ்டியினர் தனக்குக் கொடுத்து வரும் குடைச்சல் குறித்து பொதுக் கூட்ட மேடையிலேயே இளங்கோவன் வாய் திறந்தநிலையில் வாசன் இவ்வாறு பதில் தந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X