For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெங்கடேச பண்ணையார் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெங்கடேச பண்ணையார் கொலை வழக்கை தமிழக காவல் துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் பண்ணையாரின் நண்பர் பெப்சி முரளி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை சென்னை காவல் துறை விசாரித்து வருகிறது. இந் நிலையில் பண்ணையாரின் நண்பரான பாலமுரளிஎனப்படும் பெப்சி முரளி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், வெங்கடேச பண்ணையார் தமிழக காவல் துறையின் திட்டமிட்ட சதி காரணமாகவேகொல்லப்பட்டுள்ளார். எனவே இந்த கொலை வழக்கை தமிழக காவல் துறை விசாரித்தால் உரிய நியாயம்கிடைக்காது.

எனவே பண்ணையார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழகஅரசின் உள்துறைச் செயலாளர், காவல் துறைத் தலைவர், சென்னை மாநகர காவல் துறை ஆணையர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X