காங். ஆட்சிக்கு வந்தால் புதுவை தனி மாநிலம்: நாராயணசாமி உறுதி
பாண்டிச்சேரி:
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் புதுவை யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து நிச்சயம்கிடைக்கும் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவை பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து கோரி பலவருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை வலுப் பெற திமுகவும், காங்கிரஸும்முக்கியப் பங்கு வகித்துள்ளன.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் நிச்சயம் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும், நிச்சயம் புதுவை தனி மாநிலமாகும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு புதுவைக்கு தனி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கையை புறக்கணித்துவிட்டது. கடந்த நான்கரை ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் புதுவை முற்றிலும்புறக்கணிக்கப்பட்டது.
புதுவையில் பாமக வேட்பாளர் பேராசியர் ராமதாஸ் பெரும் வெற்றி பெறுவது உறுதி. ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பாமகவுக்கு ஆதரவு அளிக்கின்றன என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications