சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பலி- 7 பேர் படுகாயம்
சிவகாசி:
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர்இறந்தனர். மேலும் 7 பலத்த காயமடைந்தனர்.
இன்று பகலில் நடந்த இந்த விபத்தில் தொழிற்சாலையின் கூரை உடைந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கிஒருவர் பலியானார். மற்ற இருவரும் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.
மூவருமே சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த மேலும் 7பேருக்கும் பலத்த தீக் காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்தால் அந்தத் தொழிற்சாலை முழுவதும் தீப் பிடித்துக் கொண்டது.
சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தும் சுமார் 4மணி நேரம் போராடித் தான் தீயை அணைக்க முடிந்தது.
சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications