For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியின் ஆதரவை ஏற்க முன் வந்தது அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

வந்தவாசி:

ரஜினியின் ஆதரவை ஏற்கத் தயார் என்று அதிமுக முதல் முறையாக அறிவித்துள்ளது.

தானே வலிய வந்து ஆதரவு தந்தும் கூட ரஜினியை அதிமுக உதாசீனப்படுத்தியே வந்தது.அதிமுகவுக்கு பயந்து கொண்டு பா.ஜ.கவும் இந்த விஷயத்தில் அடக்கி வாசித்தது.

இந் நிலையில் வந்தவாசி தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி ராஜனை ஆதரித்துமேலமலையனூரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிமுக பொருளாளரும்,சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவருமான திண்டுக்கல் சீனிவாசன், ரஜினியின் ஆதரவை அதிமுகவரவேற்பதாகக் கூறினார்.

அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் ரஜினியின் ஆதரவை வரவேற்றுப் பேசியிருப்பது இதுவேமுதல்முறையாகும்.

அவர் பேசுகையில், ரஜினி ரசிகர்களுக்கு நட்புக்கரம் நீட்ட எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.அதிமுக தொண்டர்களும் ரஜினி ரசிகர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்றார்.

சமீபத்தில் தான் வட சென்னை கிளைக் கழகச் செயலாளர் ஒருவர் ரஜினி படத்தை அதிமுகபோஸ்டரில் அச்சடித்ததற்காக கட்சியை விட்டு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா.

ஆனால், மாநிலம் முழுவதும் தீவிரமான அதிமுக எதிர்ப்பு அலை வீசி வருவதாக செய்திகள் குவிந்துவருவதால் ஜெயலலிதாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ஆதரவு தனக்குபேருதவி செய்யும் என்று அவர் நினைக்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்தே திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக முதல்முறையாக ரஜினிக்கு கிரீன் சிக்னல்தரப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர்கள் புகார்:

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ரஜினி ரசிகர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கடிதம் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள ரஜினி ரசிகர்கள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாண்டியன் , தலைமை தேர்தல்ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமதாசுக்கு எதிராக மதுரையில் ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டிய போது, அவர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்த வேண்டும் என முன்பே திட்டமிட்டு கம்பு, மற்றும் ஆயுதங்களுடன் ராமதாசின்ஆதரவாளர்கள் வந்துள்ளனர். இச் சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழகதேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறி ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய ராமதாஸ் மற்றும்பா.ம.கவினருக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றுதெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X