சென்னை துறைமுகத்தில் ரூ. 1 கோடி வெளிநாட்டு கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்
சென்னை:
சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்தியவருவாய்த்துறையின் உளவுப் பிரிவினர் சென்னை துறைமுகத்தில் கைப்பற்றினர்.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கடந்த ஒரு வாரமாகவே துறைமுகத்தில்கண்காணிப்பை தீவிரப்படுத்தியது வருவாய்த்துறை.
சீனாவில் இருந்து கடந்த 12ம் தேதி வந்திறங்கிய ஒரு கண்டெயினரை சோதனையிட்டபோது அதில்20,000 பெட்டிகளில் பிரபலமான பிராண்டைச் சேர்ந்த 2 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன.இதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
ஆனால், இந்த கண்டெயினரில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 40 கம்ப்யூட்டர் டேபிள்கள் 435பெட்டிகளில் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக ஆவணங்களில் கடத்தல்காரர்கள்குறிப்பிட்டிருந்தனர்.
கஸ்டம்ஸ் துறையினருக்கு லஞ்சம் தந்துவிட்டு வெறும் ரூ. 1.25 லட்சம் மட்டும் வரியைக்கட்டிவிட்டு இந்த ரூ. 1 கோடி மதிப்பு சிகரெட்டுகளை கடத்தல்காரர்கள் எடுத்துச் செல்ல இருந்தநிலையில் உளவுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டனர்.
இவர்களுக்கு உதவியாக இருந்த கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் ஏஜென்ட் ஒருவரும், கடத்தலில் நேரடித்தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த இறக்குமதியைச் செய்ததாக சென்னையில் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுஅதன் முகவரியும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த முகவரி போலியானதுஎன்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கஸ்டம்ஸ் ஆட்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்பதால் அவர்களிடமும் விசாரணைநடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications