விபத்து இழப்பீடு: மதுரை அரசு டாக்டர்களின் மோசடி
மதுரை:
தமிழக அரசின் விபத்து இழப்பீடு நிதியை போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி செய்ததாக 34 அரசுடாக்டர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விபத்துக்களில் இறப்போருக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் வழங்கும் சான்றிதழ்களின்அடிப்படையில் தமிழக அரசு இழப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தை சில அரசு டாக்டர்கள்தவறாகப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து மதுரை சரக ஊழல் தடுப்புப் போலீஸார் மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வுநடத்தினர். அப்போது சிலருடன் கூட்டு சேர்ந்து, அரசு டாக்டர்கள், அரசின் விபத்து இழப்பீடுநிதியைப் பெற்றுத் தர போலியான சான்றிதழ்களை உருவாக்கியுள்ளது தெரியவந்தது.
இந்த மோசடியில் சென்னையில் உள்ள சில அரசு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து மோசடி செய்த 34 மதுரை அரசு டாக்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications