கருத்து கணிப்புகளால் கவலை இல்லை: பா.ஜ.க.
சென்னை & பாண்டிச்சேரி:
கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு பா.ஜ.க. கவலைப்படவில்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர்குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கருத்துக் கணிப்பு முடிவுகளை பா.ஜ.க. எப்போது பெரிதாகஎடுத்துக் கொண்டதில்லை. சாதகமாக இருந்தபோதும் சரி, பாதகமாக வந்தபோதும் சரி இதுகுறித்து நாங்கள்கவலைப்பட்டதில்லை.
காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் பிரதமர் என்பதை அவர்களால் கூற முடியவில்லை.ஆனால் பா.ஜ.க. கூட்டணி மிகத் தெளிவாக உள்ளது. சாதனைகளைக் கூறி நாங்கள் வாக்கு கேட்கிறோம்.
பா.ஜ.க. கூட்டணிக்கு நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.
பொடா கடுமையாகும்: இல.கணேசன்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் இன்னும் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாரதீயஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு தீவிரவாதிகளால்தொடர்ந்து அச்சம் இருந்து வருகிறது. பொடா சட்டத்தின் மூலம் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் இன்னும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டத்தை மேலும் கடுமையாக்கி தொடர்ந்து அதைதீவிரமாக அமல்படுத்தும்.
கம்யூனிசத்தை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பேசி வருகிறார். கம்யூனிசம் பிறந்த நாடுகளிலேயே அதுஇப்போது இல்லை. இந்தியாவில் மட்டும் எதற்கு கம்யூனிசம் தேவை? இங்கு இருப்பவர்கள் போலிகம்யூனிசவாதிகள்.
கட்சிகள் அணி மாறுவது சாதாரண விஷயம்தான். ஆனால் பா.ம.கவைப் போல எந்தக் கட்சியும் அடிக்கடிஅணிகளை மாற்றியிருக்காது. அந்த வகையில் வரலாற்றுச் சாதனையே படைத்துள்ளது பா.ம.க. என்றார் அவர்.