தாய்லாந்து: போலீஸ்- தீவிரவாதிகள் மோதல்; 112 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பாங்காக்:

தாய்லாந்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில்107 தீவிரவாதிகளும், 5 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். மேலும் 15 போலீஸார் காயமடைந்தனர்.

தெற்கு தாய்லாந்தில் பட்டானி, சாங்க்லா, ஏலா பகுதிகளில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளிலும், மாவட்டபோலீஸ் தலைமையகங்களிலும் இன்று காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அப்போது போலீஸ் தரப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதல்களில் குறைந்து 107 தீவிரவாதிகளும், 3போலீஸாரும், 2 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். 15 போலீஸார் காயமடைந்தனர். 15க்கும்மேற்பட்ட இடங்களில் இத்தகைய மோதல் நடந்தது.

தாக்குதலுக்குப் பின் தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்புப் படையினர், ஒரு மசூதியில் பதுங்கியிருந்த 32தீவிரவாதிகளைத் தேடிப் பிடித்து சுட்டுக் கொன்றனர். 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பெரும்பாலோனோர் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்ஆவர். போலீஸாரின் ஆயதங்களைக் கொள்ளைடிக்கும் பொருட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,தாக்குதல் பற்றி முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்திருந்தால், போலீஸார் உஷார் நிலையில் இருந்ததாகவும் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து தாய்லாந்து பிரதமர் தக்ஷின் சைனவத்ரா கூறுகையில், தீவிரவாதிகளில் பெரும்பாலோனோர்கோடாரியும், சிலர் மட்டும் துப்பாக்கி வைத்தும் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீஸ் தரப்பில் குறைவாக உயிர்ச்சேதம் மட்டும் ஏற்பட்டது என்றார்.

கடந்த ஜனவரி முதல் தெற்கு தாய்லாந்தில் தீவிரவாதிகள் மோதல் நடந்து வந்திருந்தாலும், இது தான் மோசமானதாக்குதலாகும். இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+