சேலம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஜ.மு.கூ. வெளிநடப்பு
சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் சேது.ராமச்சந்திரன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து,போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் சேலம் தொகுதி தேர்தல்பார்வையாளர்கள் பிரகாஷ் கராண்டோ மற்றும் அதிமுக, திமுக, பாமக, மதிமுக, பா.ஜ.க., காங்கிரஸ் உள்படஅனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைதெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் அளித்த பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.
இதனையடுத்து சேலம் மாநகர திமுக செயலாளர் சுபாஸ், கார்த்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபாஸ் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழப்பாடியில் பிரசாரம் செய்யப் போவதாக 4 நாட்களுக்கு முன்னர்போலீஸாரிடம் அனுமதி பெற்று இருந்தோம். ஆனால் போலீஸார் பிரசாரம் நடைபெறும் இடத்தில் கொடி மற்றும்பேனர்களை அகற்றி உள்ளனர். இதே போல் காரிப்பட்டி, ராமலிங்கபுரத்திலும் போலீசார் பாரபட்சமாக நடந்துஉள்ளனர் என்று கூறினார்.
இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம் கூறியதாவது:-
தோல்வி பயத்தில் திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்து உள்ளனர். சொல்ல வேண்டிய கருத்தை தேர்தல்பார்வையாளர்களிடம் கூறி தீர்வு காண்பதற்கு பதிலாக அரசியல் கட்சி கூட்டம் போல் வெளிநடப்பு செய்துள்ளனர்என்றார்.












Click it and Unblock the Notifications