தேர்தல் பாதுகாப்பு: தமிழகம் வந்தது துணை ராணுவம்
சென்னை:
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தினர் இன்று சென்னைவந்து சேர்ந்தனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 25 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தபகுதிகளில் மத்திய போலீஸ் படையும், துணை ராணுவத்தினரும் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வர ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய போலீசின் முதல் 2 அணியினர் (மத்திய தொழில் பாதுகாப்பு படை) நேற்று சென்னை வந்துபின்னர் அவர்கள் விருத்தாசலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று காலை துணை ராணுவத்தினர் (எல்லை பாதுகாப்பு படை) 2 ரெயில்களில் சென்னை வந்தனர். காக்கி நாடாஎக்ஸ்பிரஸ் ரெயிலில் 95 துணை ராணுவத்தினரும், 105 மத்திய போலீசாரும் (சி.ஆர்.பி.எப்), ஆந்திர மாநிலம்கர்னூல்பேட்டையில் இருந்து ஒரு தனி ரெயிலில் 1000 துணை ராணுவத்தினரும், மத்திய போலீஸ் படையினரும்வந்தனர்.












Click it and Unblock the Notifications