ரஜினி: தமிழகத்திடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்
டெல்லி:
மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக அறிக்கை அனுப்புமாறு தமிழக அரசுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ரஜினிகாந்த், தேர்தலுக்கு முன்பும், பின்பும் தனது ரசிகர்கள்மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது பா.ம.கவினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, எந்தெந்தத் தொகுதிகளில் ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதுஎன்பதை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், அது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும்அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாமகவினர் ஜாமீன் மனு:
இந் நிலையில், மதுரையில் ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ம.கவினர்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிவா, சசிகுமார், முருகன், பார்த்திபன், ராஜேந்திரன், ஆனந்தகுமார், சுகுமாரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்,
இந்த வழக்கில் போலீஸ் புலன் விசாரணைமுடிந்துவிட்டதால், எங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.