54 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுதலை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை சிறையில் நீண்ட நாட்களாக அடைபட்டிருந்த 54 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுமண்டபம் கொண்டு வரப்பட்டனர்.

ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்பல்வேறு காலகட்டங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில்அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 54 பேரை விடுவித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இவர்கள் விடுவிக்கப்படாமல்இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்பு ஒன்று இலங்கை சென்று தமிழகமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் பலனாக தற்போது 54 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சர்வதேச கடல் எல்லையில்,இந்திய கடலோர காவல் படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் 54 பேரும் படகுகள்மூலம் மண்டபம் கொண்டு வரப்பட்டனர். அங்கு அனைவரும் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+