ஊழல் வழக்கில் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் விடுதலை
சென்னை:
ரூ. 23.10 லட்சம் ஊழல் வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரானஎம்.கோபாலகிருஷ்ணன், தரகர் ஜெயச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைவராகவும் இருந்தவர் கோபாலகிருஷ்ணன். குறுகிய காலத்தில்தமிழகம் முழுக்கத் தெரிந்த நபராக மாறினார். தொலைக்காட்சியில் இவரது முகம் தெரியாத நாளே இல்லை எனும்அளவுக்கு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் இவர் இடம் பெறுவார்.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் நடத்தும் மக்கள் தமிழ் தேசம் கட்சியிலும் சில காலம் இருந்தார், தேர்தலில்போட்டியிட்டுத் தோல்வியையும் தழுவினார். திரைத்துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இவர் ஏராளமானகடன் கொடுத்ததால் இந்தியன் வங்கியே திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் சிபிஐ அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மீதும், ஜெயச்சந்திரன் என்ற தரகர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர்.
அதில், கடந்த 1990ம் ஆண்டு முதல் 91ம் ஆண்டு வரை கோபாலகிருஷ்ணனும், ஜெயச்சந்திரனும், சென்னைஉள்ளிட்ட சில நகரங்களில் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையால்இந்தியன் வங்கிக்கு ரூ. 23.10 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று புகாரில் சிபிஐ தெரிவித்திருந்தது.
வழக்கை சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. நேற்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.நீதிபதி ராமசாமி தனது தீர்ப்பில்,
குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் முழுமையாக பரிசீலித்துப் பார்த்தபோது, அரசுத்தரப்பு தனது குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று தெரிகிறது.
இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை. வங்கிதொடர்பான முடிவுகளை எடுத்தபோதெல்லாம், வங்கியின் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசியேகோபாலகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். மேலும் ஜெயச்சந்திரன் சட்டவிரோதமான தரகர் அல்ல,அங்கீகக்கப்பட்ட தரகர்தான்.
தவறு நடந்திருப்பதாக தெரிந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைதான் எடுத்திருக்கவேண்டும். வழக்குத் தொடர்ந்திருக்கத் தேவையில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications