மே 10ல் விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு அரசு கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்துத் தொழிலாளர்களுக்கும்அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும்கடைகளுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135- பிரிவி-ன் படி, தொழில், வர்த்தக மற்றும் கடைகள்- நிறுவனங்களிலும்பணிபுரியும், வாக்களிக்கத் தகுதியான ஒவ்வொருவருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில்வாக்களிக்க சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
எனவே அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மே 10-ம் தேதிசம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு அரசு கேட்டுக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications