சென்னையில் கடும் வெயில்: இருவர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நிலவும் கடும் வெயில் காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ளது. சில பகுதிகளில் மழை பெய்துகுளிர்வித்தாலும் பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரி அளவைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது.
இந் நிலையில் சென்னை பிராட்வே சாலையில் 60 வயது மதிக்கத்தகக்க ஒருவர் கடும் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து இறந்தார். அதேபோல பாரிமுனை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர்மயங்கி விழுந்து இறந்தார்.
இருவரின் பெயர், விவரங்கள் குறித்து தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும்சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 3ம் தேதி தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications