சின்னத்தையே வாடகைக்கு விட்ட சு.சுவாமி !
சென்னை:
உருப்படியான அரசியல் கட்சிகளின் வரிசையில் புதிய நீதிக் கட்சியும் சேர்ந்துள்ளது. இந்தக் கட்சி 28தொகுதிகளில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது.
தேசியக் கட்சியாக விளங்கிய ஜனதாக் கட்சி சுப்பிரமணியம் சுவாமியின் "தலைமையின் கீழ்" தற்போது மாநிலக்கட்சியாக சுருங்கி விட்டது. மாநிலக் கட்சியாக சுருங்கினாலும் கூட ஜனதாக் கட்சியின் சின்னமாக பாரம்பரியம்மிக்க ஏர் உழவன் சின்னம் விளங்கி வருகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் பல தொகுதிகளில் போட்டியிட்டு வாக்கு விகிதாச்சாரத்தை நிலையாக வைத்துக் கொண்டுசின்னத்தை காப்பாற்றிக் கொள்வது சுவாமியின் பழக்கம்.
அந்த வகையில், தற்போதும் தனது சின்னத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு கட்சிக்கே தனது சின்னத்தை"வாடகைக்கு" விட்டுள்ளார் சுவாமி. ஏ.சி.சண்முகத்தின் தலைமையில் செயல்படும் ஜாதிக் கட்சியான புதிய நீதிக்கட்சிக்கு ஏர் உழவன் சின்னத்தைக் கொடுத்துள்ளார் சுவாமி.
புதிய நீதிக்கட்சி இந்தத் தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது (எதிலும் வெற்றி பெறாது என்றாலும் கூட).இதில் 28 தொகுதிகளில் ஏர் உழவன் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறது. திண்டிவனம், கடலூர் வேட்பாளர்களுக்குமட்டும் ஏர் உழவன் கிடைக்கவில்லை, மாறாக ஆகாய விமான சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்தான் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்கள். சுவாமி புண்ணியத்தில் புதிய நீதிக்கட்சியும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
முதலியார்கள், வேளாளர்கள் ஆகியோரது வாக்குகளை நம்பி களத்தில் குதித்துள்ளபுதிய நீதிக் கட்சி, வேளாளர்சமூக மக்களின் முக்கியத் தொழில் உழவு என்பதை கருத்தில் கொண்டு, சென்டிமென்டாக ஏர் உழவன் சின்னத்தைசுவாமியிடமிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications