வைகோ: பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழுஉத்தரவிட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது போட்ட பொடா வழக்குகளை வாபஸ் பெறவேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளை மட்டுமேகட்டுப்படுத்தும் என்றும், இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில்இருப்பதால் அதை வாபஸ் பெற வேண்டியது இல்லை என்றும் தமிழக அரசு கூறியது.
இதனால் பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்த தமிழக அரசு, வழக்கை வாபஸ்பெற முடியாது என்று கூறியது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார். அதில், மறு ஆய்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்று தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வைகோ கோரியிருந்தார்.
அதே போல தமிழக அரசின் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொடா மறுஆய்வுக் குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சிர்புர்கர் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், வைகோவின் கோரிக்கையை ஏற்றது.
பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரை மாநில அரசைக் கட்டுப்படுத்தும் என நீதிபதிகள் தங்களதுதீர்ப்பில் கூறினர். தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.