For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலகங்காவின் வழக்குகள் வாபஸ்: தேர்தல் ஆணையத்திடம் அரசு விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாலகங்கா மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. .

பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியபோது,கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாலகங்கா, முன்னாள் எம்.பி. காளியப்பன்,மதுசூதனன் உள்ளிட்ட 66 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கு முன்னரும் பாலகங்கா மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த இன்னொரு வழக்கும் திருவல்லிக்கேணிகாவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பாலகங்கா மீதான வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனையடுத்துஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர் மீதான கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறஆணை பிறப்பித்த தமிழக உள்துறைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல்ஆணையருக்கு திமுக பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி புகார் மனு அனுப்பினார்.

இந்தப் புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி,பாலகங்கா மீதான வழக்குகள் விவரம், அவை வாபஸ் பெறப்பட்டதன் காரணங்கள் உள்ளிட்ட தகவல்கள்அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.

இந்த அறிக்கை மீது தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை:

இந் நிலையில், தமிழக தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட மத்திய தேர்தல் ஆணையர் டாண்டன் நாளை சென்னை வருகிறார்.

நாளை சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி மற்றும் உயர் அதிகாரிகளுடன்டாண்டன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட்டு, உரிய ஆலோசனைகளை வழங்குகிறார்.

வீரப்பன் பகுதிகள்:

இதற்கிடையே சந்தன மரக் கடத்தல் வீரப்பன் நடமாடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகளை தருமபுரிமக்களவைத் தொகுதி முதன்மை தேர்தல் பார்வையாளர் விமலேந்திரசரன் பார்வையிட்டார்.

வீரப்பன் நடமாட்டம் இருக்கும் கருங்கல்லூர், காவேரிபுரம், கத்திரிப்பட்டி, பெருமாள் கோவில் நத்தம், சின்னதண்டா, செட்டிபட்டிஆகிய பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாஎன்பதை தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X