நீதிமன்ற வளாகத்திற்குள் கிடா வெட்டிய வழக்கறிஞர்கள்
சேலம்:
சேலம் நீதிமன்ற வளாகத்தில் ஆடு வெட்டி பொங்கல் வைத்து சில வழக்கறிஞர்கள் விழா நடத்தியதால், பெரும்சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கண்ணானகுறிச்சி என்ற இடத்தில் மாங்கொல்லை ஒன்று உள்ளது. இங்கு வருடந்தோறும்வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆடு, கிடா வெட்டி பூஜை செய்து, பொங்கலிட்டு படையல் வைப்பது வழக்கம்.அதேபோல, இந்த ஆண்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் மாங்காய்கள் பழுக்கத் தொடங்கியிருப்பதால் அங்கு விழா நடத்தக் கூடாது என்று ஆட்சேபனை எழுந்தது,இறுதியில் ஆடு வெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.
என்ன செய்வது என்று யோசித்த வழக்கறிஞர்கள் ஆண்டு தோறும் நடக்கும் பழக்கத்தை விட முடியாது என்பதால்,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழாவை நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்திற்கு அருகே கிடா வெட்டைநடத்தியுள்ளனர். பின்னர் விருந்து நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இது வழக்கறிஞர்களிடையே சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சிலர், மாவட்ட நீதிபதியிடம் இதுகுறித்துப் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications