ஜெயலலிதாவுக்காக நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

முதல்வர் ஜெயலலிதாவின் கார் போவதற்காக திமுக தலைவர் கருணாநிதியின் வேனை போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதனால் வேனுக்குள்ளேயே சுமார் முக்கால் மணி நேரம் கருணாநிதி காத்திருக்க நேர்ந்ததால்திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூரில் பிரசாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி பின்னர் தாழையூத்தில் உள்ள விருந்தினர் விடுதியில்தங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பாளையங்கோட்டை நோக்கி ஜெயலலிதா காரில் வந்துகொண்டிருந்தார்.

அவரது கார் வண்ணாரப்பேட்டை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென்று வண்டியை நிறுத்திபேசத் தொடங்கினார் ஜெயலலிதா. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பை பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த கருணாநிதியின் பிரசார வேனும், திமுகவினரின்வாகனங்களும் மேற்கொண்டு போக முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

ஜெயலலிதா போன பிறகே வாகனங்களை அனுப்ப முடியும் என்று போலீஸார் கூறியதால், கருணாநிதிவேனுக்குள்ளேயே அமர வேண்டியதாயிற்று. சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு ஜெயலலிதாவின் பிரசாரம்முடிந்த பின்னரே கருணாநிதியின் வேன் புறப்பட முடிந்தது.

நடுரோட்டில் வேனுக்குள்ளேயே கருணாநிதி சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்ததால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+