திருப்பதி கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை நீக்கம்
திருமலை:
திருப்பதி கோவில் மலைப் பாதையில் செல்போன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டுள்ளது. இத் தகவலை அறங்காவல் குழு தலைவர் ஆதிகேசவலு தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் நடந்த பிரம்மோற்சவவிழாவில் கலந்து கொள்ள வந்தபோது மலைப் பாதையில் அவரது கார் மீது வெடிகுண்டுத் தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
குண்டுகளை இயக்கச் செய்ய செல்போன்களும் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து திருப்பதிமலைப் பாதையில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. செல்போன்களை செயலிழக்க வைக்க ஜாமர்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இத் தடையால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். இந்த தடையை நீக்க கோரி வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து கோவில் அறங்காவல் குழுக் கூட்டத்தில் செல்போன்களுக்கான தடையை நீக்குவது என்றுமுடிவெடுக்கப்பட்டது.