ஜெவுக்கு கருணாநிதி சவால்
கமுதி:
பா.ஜ.கவைப் பற்றிய ரகசியங்களைச் சொல்வேன் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா அந்த ரகசியங்களைவெளியிட்டால் 6 மாதத்திற்கு அரசியலிலிருந்து விலத் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட கமுதி நகரில் கருணாநிதி பிரசாரம் செய்தார். அப்போது, பா.ஜ.கவைப் பற்றியும்,பா.ஜ.க. தலைவர்களைப் பற்றியும் பல பயங்கர உண்மைகளை பத்திரிக்கைகள் மூலம் விரைவில் வெளியிடுவேன்என்று முன்பு ஜெயலலிதா முழங்கினார்.
ஆனால் இப்போது அதுகுறித்து அவர் வாயே திறப்பதில்லை. அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். பா.ஜ.க.ரகசியங்களை பத்திரிக்கைகளில் பகிரங்கமாக வெளியிட அவர் தயாரா? அப்படிச் செய்தால் நான் 6 மாதத்திற்குஅரசியலில் ஈடுபட மாட்டேன், ஜெயலலிதா இதற்குத் தயாரா?
இதை செய்ய ஜெயலலிதா தவறினால், குறைந்தபட்சம், வாய் தவறி அப்படிச் சொல்லி விட்டேன் என்றாவது கூறஜெயலலிதா தயாரா?
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஜெயலலிதா அரசுக்கு எதிராக கை கோர்த்து நிற்கிறார்கள். தங்களது தீர்ப்பைமே 10ம் தேதி எழுதவுள்ளார்கள். மக்களின் பிரச்சினைகளை உணர்ந்துள்ள கூட்டணி ஜனநாயக முற்போக்குக்கூட்டணி என்பது மக்களுக்குத் தெரியும் என்றார் அவர்.
இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில், கருணாநிதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் பேசுகிறார்கள்.