திருவாரூர் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்: 9 பேர் படுகாயம்
திருவாரூர்:
திருவாரூரில் நடந்த ஆழித் தேரோட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்தனர்.
புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் திருவாரூரில் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
இதில் 2 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள், மாதவன், தியாகராஜன், சுசிலா,விஜயா, கமலா, அமிர்தம், சுந்தரேசன் ஆகியோர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் சுந்தரேசனின் நிலைகவலைக்கிடமாக உள்ளது. அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆழித் தேரோட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்டதேரை இவர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் சுமூகமாக செல்லும் பொருட்டு இரண்டு புல்டோசர்களும்பயன்படுத்தப்பட்டு தேர் தள்ளப்பட்டு வந்தது.