தர்மபுரி அருகே வேன்-லாரி மோதல்; 4 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே இன்று அதிகாலை நடந்த லாரி - வேன் மோதலில் 4 பேர் இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயம்அடைந்தனர்.
பெங்களூர் அருகே உள்ள குமாரசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்த பசவராஜ் (38), இவரது நண்பர் நாகராஜ் (42)ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கன்னியாகுமாரி சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
இன்று அதிகாலையில் தர்மபுரி அருகே இவர்கள் வந்தபோது, திருப்பூரில் இருந்து பனியன் ஏற்றி வந்த லாரியுடன்வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கலசம்மாள் (34), புருத்தாயம்மாள் (40), சிக்கம்மாள் (வயது40),லாரி கிளீனர் குமார் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர்படுகாயமடைந்தனர்.
இவர்கள்அனைவரும் தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தெரிய வந்ததும் மாவட்ட கலெக்டர் சித்திக், எஸ்.பி.பெரியய்யா ஆகியோர் சம்பவ இடத்திற்குசென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும்ஆறுதல் கூறினர்.
தர்மபுரி போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.