தனியார் செல்போன் எஸ்.டி.டி. கட்டணம் திடீர் உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தனியார் செல்போன் நிறுவனங்கள் எஸ்.டி.டி. கட்டணத்தை திடீரென்று உயர்த்தியுள்ளன.
200 கி.மீ. தூரம் வரை ஒரு செல்போனிலிருந்து மற்றொரு செல்போனுக்கு பேச ஒரு நிமிடத்துக்கு இதுவரைவசூலிக்கப்பட்டு வந்த ரூ.1.99 கட்டணம் தற்போது ரூ.3.49 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செல்போனிலிருந்து வெளி மாநிலங்களுக்கு சாதாரண தொலைபேசியில் பேசுவதற்கு ரூ.2.99 வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.4.49 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 500 கிலோ மீட்டர்வரையிலான வெளி மாநில எஸ்.டி.டி கட்டணம் ரூ. 3.99லிருந்து ரூ. 5.49 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கி.மீக்கு அதிகமான தூரத்துக்கு ரூ. 4.99 பதிலாக இனி ரூ. 6.49 வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வுஉடனடியாக அமலுக்கு வருகிறது. பி.எஸ்.என்.எல். செல்போன்களில் கட்டண உயர்வு எதுவும்அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications