பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை:
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரையில் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம்ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு முத்திரை நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்றுகாலை நடந்தது.
அழகர் கோவிலிலிருந்து மதுரைக்கு வந்த கள்ளழகர், இன்று காலை 6 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில்இறங்கினார். லேசான மழைத் தூறல் இருந்தபோதும், வழக்கமான உற்சாகத்துடன் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 லட்சம் மக்கள் இந் நிகழ்ச்சியை நேரில் கண்டு கள்ளழகரின் அருளைப் பெற்றனர்.
வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கால்வாய் போன்று உருவாக்கி அதில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பியிருந்தனர். அதில் தான் கள்ளழகர் இறங்கினார். பக்தர்கள் மீது இந்தக் கால்வாயில் இருந்த புனித நீர்குழாய்கள் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக மதுரையிலும் மழை பெய்து வருவதால் காய்ந்து கிடந்த வைகையில் கொஞ்சம் நீர் ஓடஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications