அரசு ஊழியர்கள் மீது ஜெ. திடீர் பரிவு ஏன்? ராமதாஸ், சிதம்பரம் கேள்வி
சென்னை:
அரசு ஊழியர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா திடீர் என்று பரிவு காட்டுவது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரம் ஆகியோர் கேள்வி கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக அரசு ஊழியர்களையும்,ஆசிரியர்களையும் படாதபாடு படுத்தி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பல்வேறுவகைகளில் கொடுமைப்படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது தேர்தல் நெருங்குவதால் அவர்கள் மீது பாசத்துடன்இருப்பதாக நாடகமாடுகிறார்.
ஜெயலலிதாவின் "பாசத்தை" அரசு ஊழியர்கள் நன்கு உணர்வார்கள். கடந்த ஆண்டுகளில் நடந்த கொடுமைகளை,வேதனைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இதேபோல, காங்கிரஸ் ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெயலலிதாவின் பாசம் விந்தையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் அரசுஊழியர்களையும், ஆசிரியர்களையும் டிஸ்மிஸ் செய்ததை அரசு ஊழியர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும்மறக்கவே மாட்டார்கள். ஜெயலலிதாவின் நடிப்பை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications