சென்னையில் நூதனமாய் கொள்ளையடித்த இளம் பெண்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்னை வில்லிவாக்கத்தில் முதிய பெண்மணி ஒருவர் மீது மயக்க பொடியைத் தூவிய, ஒரு பெண் வீட்டில் 50பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினார்.

வில்லிவாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பொறியாளர் சண்முகசுந்தரம். சண்முகசுந்தரமும் அவரது மனைவியும்வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சண்முகசுந்தரத்தின் தாயார் வரலெட்சுமி (71) மட்டும் தனியாக இருப்பதுவழக்கம்.

இவர்கள் காம்பவுண்டில் ஒரு வீடு காலியாக உள்ளது. கடந்த 3 நாட்களாக அந்த வீட்டை வாடகைக்கு கேட்டு ஒருஇளம் பெண் வந்து சென்றார்.

வாடக்ைகு விட ஒப்புக் கொண்ட வரலெட்சுமி அட்வான்சுடன் வரச் சொன்னார். அதன்படி அட்வான்ஸ் கொண்டுவந்துள்ளதாக சொல்லிக் கொண்டு அந்த பெண் வந்தாள்.

பேசியவாறே அந்த பெண் திடீரென மயக்க பொடியை எடுத்து வரலெட்சுமி மீது தூவினாள். இதையடுத்துவரலெட்சுமி மயங்கி சரிந்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளைஎடுத்துக் கொண்டு தப்பி விட்டாள்.

வேலை முடிந்து மாலையில் வழக்கம் போல் வீட்டிற்குத் திரும்பிய சண்முகசுந்தரம், தனது தாயார் வரலெட்சுமிமயங்கிக் கிடப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டுஅதிர்ச்சியடைந்தார்.

தாயரை எழுப்பி விவரம் கேட்டபோதுதான் இளம் பெண் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களும்,கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.

கொள்ளையடித்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும் என்று வரலட்சுமி கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+