5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் ...
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலகி 5 ஆண்டுளுக்குப் பிறகு பிரதமர் வாஜ்பாயும், முதல்வர்ஜெயலலிதாவும் நேற்றிரவு ஒரே மேடையில் தோன்றினர்.
1998ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த பிறகு ஜெயலலிதாவும், வாஜ்பாயும் ஒரே மேடையில்தோன்றியதில்லை. தற்போது மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதா சேர்ந்த பிறகே இருவரும்ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
வாஜ்பாயை வரவேற்க விமான நிலையத்திற்கு ஜெயலலிதா செல்லவில்லை. நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையம்வந்திருந்ததால் ஜெயலலிதா வரவில்லை என்று கூறப்பட்டது.
பொதுக் கூட்டம் நடந்த தீவுத்திடல் மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே காணப்பட்டது.
வாஜ்பாயியின் ஆங்கிலப் பேச்சை அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் தமிழில் மொழி பெயர்த்துக்கூறினார்.
வாஜ்பாய் தனது பேச்சின்போது ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அருமை சகோதரி என்று தமிழில்விளித்ததால், கூடியிருந்த அதிமுகவினருக்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டது. ஜெயலலிதா முகத்திலும் சந்தோஷம்தெரிந்தது.
நதிகள் இணைப்பு குறித்து வாஜ்பாய் பேசியபோது, இந்தத் திட்டத்தில் கூவத்தை சேர்த்துடாதீங்க. மொத்ததிட்டமும் நாறிடும் என்று ஒரு தொண்டர் கூறியது அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications