காவிரியை கண்டுகொள்ளாத வாஜ்பாய், ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் காவிரிப்பிரச்சினை தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, வாஜ்பாய் நதிகள் இணைப்பு குறித்து விரிவாகப்பேசினார்.

வாஜ்பாய் நேற்று தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிற்பகலில் கோவை வந்த அவர்அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கோவை, நீலகிரி பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

திருப்பூரில் பேசிய வாஜ்பாய், நிலையான ஆட்சி அமைய பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடுங்கள், தனிப்பெரும்பான்மை கிடைக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் காங்கிரஸ் கட்சி பதவிக்காகவே உயிருடன் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். நேரு, காமராஜர்காலத்துடன் காங்கிரஸ் போய் விட்டது. அதன் பிறகு வந்தவர்கள் அனைவரும் பதவிக்காகவே இருந்து வருவதாகஅவர் குறிப்பிட்டார்.

திருப்பூர் கூட்டத்திலும் சரி, சென்னை கூட்டத்திலும் சரி வாஜ்பாய் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து வாயேதிறக்கவில்லை. அதுதான் காவிரிப் பிரச்சினை. காவிரி என்று மறந்தும் கூட அவர் ஒரு வார்த்தை கூடசொல்லவில்லை. அதற்கு மாறாக நதிகளை இணைத்தால் இந்தியா வளம் பெறும் என்பதை அவர் விரிவாகப்பேசினார்.

இணைவோம், நதிகளை இணைப்போம் என்று தமிழில் கூறியபடி தனது நதி நீர் இணைப்பு குறித்த பேச்சைதொடங்கினார் வாஜ்பாய். நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து 60ம் ஆண்டுகளிலேயே பேசத் தொடங்கினாலும்,அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசுகள் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தனது அரசு நதிகளைஇணைப்பதை நனவாக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேபோல ஜெயலலிதாவும் காவிரிப் பிரச்சினை குறித்து எந்தவித வேண்டுகோளையும் பிரதமரிடம்வைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+