நதிகள் இணைப்பு- வெறும் தேர்தல் ஸ்டண்ட்: ராமதாஸ்
சென்னை:
நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பிரதமர் வாஜ்பாய் பேசியிருப்பது வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று பா.ம.க.தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் வாஜ்பாய் தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து எதுவும்பேசாமல் தமிழக மக்களை ஏமாற்றி விட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தைத் தொடங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்.இது வெறும் தேர்தல் ஸ்டண்ட் ஆகும். ஏனெனில் நதிகள் இணைப்புத் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும்ஏற்படதாது குறித்து கடந்த வாரத்தில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கண்டித்தது.
நதிகள் இணைப்பு என்பது கங்கையையும், காவேரியையும் மட்டும் இணைப்பது அல்ல. இதில் மொத்தம் 31உள்இணைப்பு திட்டங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே உடன்பாடுஏற்பட வேண்டும்.
இதுவரையில் 8 இணைப்பு திட்டங்களுக்குத்தான் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஒன்றுக்குகூட சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
நதிகள் இணைப்பு என்பது நீண்ட காலத்திட்டம். ஆனால் அதுவரையில் காவிரி பிரச்சினை காத்திருக்க வைத்தால்தமிழகம் பாலைவனமாகி விடும். நதிகள் இணைப்பு என்பது ஏதோ தங்களது கற்பனையில் உதித்த திட்டம்என்பதுபோல இப்போது சிலர் புதிதாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.
கர்நாடகத்தின் மீதுள்ள பற்றுதலால் நதிகள் இணைப்புத் திட்டம் என்று பேசி காவிரி பிரச்சினையை திசை திருப்பிவிட முயற்சித்துக் கொண்டி ருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.இத்தகையோரை தமிழக மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.