தமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் உள்ள 183 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்டவாக்குப் பதிவு வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம்நாளை மாலையுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுவை தொகுதிக்கு, ஒரே நாளில் (10ம் தேதி) வாக்குப் பதிவுநடைபெறவுள்ளது.

இங்கு 39 தொகுதிகளிலும் மொத்தம் 571 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 23 பேர் பெண்கள்.அதிகபட்சமாக தென் சென்னையில் 35 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூர், பொள்ளாச்சி தனி தொகுதிகளில்தலா 7 பேரும் களத்தில் உள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 4.72 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். இதில் 2.39 கோடி பேர் பெண்கள்.பாண்டிச்சேரியில் 6.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பாண்டிச்சேரியில் 21 பேர் களத்தில் உள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி வட சென்னை தான். இங்கு 20 லட்சம் வாக்காளர்கள்உள்ளனர். சிறிய தொகுதி பெரம்பலூர் (தனி). இங்கு 9.99 வாக்காளர்கள் உள்ளனர்.

நாளையுடன் ஒய்கிறது பிரச்சாரம்

நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி தமிழகத்தில் பிரசாரம் உச்ச கட்டத்தைஎட்டியுள்ளது. முக்கியத் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிரதமர் வாஜ்பாய்-முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டு பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி- திமுக தலைவர் கருணாநிதியின் பொதுக் கூட்டம் தீவுத் திடலில் நடக்கிறது.

அதே போல துணைப் பிரதமர் அத்வானியும் தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்.

இயந்திரங்கள் அனுப்பும் பணி:

இந் நிலையில் தமிழகத்தில் வாக்குப் பதிவுக்குத் தேவைப்படும் மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி இன்று தொடங்கியது.

இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிஇன்று காலை தொடங்கியது.

சென்னையில் உதவி தேர்தல் அதிகாரி ராமகிருஷ்ணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன. பின்னர் அவர்களதுசந்தேகங்கள் தீர்க்கப்பட்டு அதன் பின்னர் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளுக்குஇவை அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதவிர அடையாள மை உள்ளிட்ட பொருட்களும் இன்றே அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்படும். 9ம் தேதி காலை இவை அனைத்தும் வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும் என்றார்.

அதே போல தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்குப் பதிவு எந்திரங்கள்பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளின் அருகே உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் போலீஸ்பாதுகாப்புடன் இவை வைக்கப்பட்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+