மே 10ல் பாலசிங்கம்- நார்வே அமைச்சர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
லண்டனில் இருந்து இலங்கை திரும்பியுள்ள -விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம்வரும் 10ம் தேதி (திங்கள்கிழமை) வன்னி பகுதியில் நார்வே அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தனது மனைவி அட்லியுடன் பாலசிங்கம் கொழும்பு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் கிளிநொச்சிக்குசென்றார். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தும் பாலசிங்கம் 10ம் தேதி நார்வேவெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சனை சந்திக்கிறார்.
வரும் ஜூன் மாதம் புலிகளுடன் சமரச பேச்சு தொடங்கும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்லட்சுமணன் கதிர்காமர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications