அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஆசிரியர் கைது
சென்னை:
தாம்பரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸார்கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவர் மதுராந்தகம் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஜெயலலிதா மானாவாரியாக டிஸ்மிஸ் செய்த சம்பவத்திலிருந்து இவர்ஜெயலலிதா மீதும் அதிமுக மீதும் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
இந் நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவந்தார். புதன்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்தவர்களிடம் அதிமுகவுக்குஎதிராக துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார்.
அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்த ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்டஅதிமுக, பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறப்பட்டிருந்தது.
முறையான அனுமதி இல்லாமல் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாக கூறி சின்னக்கண்ணுவை ரயில்வேபோலீஸார் கைது செய்தனர்.