கருத்து கணிப்பு: லயோலா கல்லூரி முதல்வர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருத்துக் கணிப்பு நடத்தி தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்லும் என்று முடிவுகளை வெளியிட்ட சென்னைலயோலா கல்லூரி முதல்வர், விஷூவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசீலி ஜான் என்பவர் இது தொடர்பாக தொடர்ந்துள்ளபொது நலன் மனுவில், மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதே ஒரு கல்லூரியின் கடமையாகும். அதைவிடுத்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாகவே கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது நியாயமானசெயலாக இருக்க முடியாது.

அரசியல் கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் இது போன்ற கருத்துக் கணிப்புகளால் லயோலா போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பாரம்பரியமும், பெருமையும் கெடும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மாநில அரசின் கருத்தைப் பதிவு செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

லயோலா கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுககூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+