திமுக கொடியை ஏற்றிய வைகோ
விருதுநகர்:
சிவகாசி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, ஒரு இடத்தில் திமுக கொடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோஏற்றி வைத்தார்.
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து அவர் பேசியதாவது:
பொதுமக்களுக்கு ஜெயலலிதாவின் பேச்சு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் விதவைப் பெண்களை யாரும்விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கடுமையாகப்விமர்சிக்கிறார்.
ஒரு தவறும் செய்யாத என்னை 19 மாதம் சிறையில் அடைத்தார். என்னை சிறையில் தள்ளியவர்களுக்கு நீங்கள்(மக்கள்) தான் தண்டனை கொடுக்க வேண்டும்.
மக்களின் முகத்தைப் பார்த்தே வெற்றி, தோல்வியை நான் கணித்து விடுவேன். இப்போது மக்களின் முகங்களைப்பார்க்கும்போது, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது.
50 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாதான் முதல்வர் என்று எண்ணி சில போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதன் பலனை அனுபவிக்க வேண்டி வரும் என்றுகூறினார்.
பிரசாரத்தின்போது அல்லம்பட்டி என்ற இடத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார் வைகோ.