கள்ள வாக்காளர்களை தேடி ...
சென்னை:
கள்ள ஓட்டுப் போடுவதைத் தவிர்க்கும் முகமாக சென்னை விடுதிகள், கல்யாண மண்டபங்களில் வெளியூர்க்காரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் குழு தீவிர சோதனை நடத்தியது.
நாளை வாக்குப் பதிவு நடக்கவுள்ளதையடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க பல முயற்சிகளைமேற்கொண்டுள்ளது.
அதில் ஒரு முயற்சியாக, சென்னையில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபங்களில் வெளியூர்க்காரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா என்பதை சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜ் தலைமையில் துணை ஆணையர்அபூர்வா, தென் சென்னை தொகுதி தேர்தல் அதிகாரி தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆகியோர் கொண்ட குழு கல்யாணமண்டபங்கள், விடுதிகளுக்குச் சென்று சோதனையிட்டது.
வாக்குப் பதிவு முடியும் வரை இந்த சோதனை தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அதிமுகவினர்ஏராளமான அளவுக்கு வாக்குச் சாவடி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இது குறித்துவிசாரணை நடந்து வருவதாகவும் ஆணையர் விஜயக்குமார் தெரிவித்தார்.
இதுதவிர கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து வாக்காளர்கள் தகவல் தெரிவிக்க சென்னையில் உள்ள 14 சட்டசபைத்தொகுதிகளிலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமானரிப்பன் கட்டடத்திலும் சிறப்புப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.