விரைவில் வரப் போகிறது வீராணம் நீர்-- விடாமல் சொல்கிறார் ஜெ
சென்னை:
சென்னை நகருக்கு தேர்தலுக்குள் வீராணம் நீர் வந்து சேரும் என எதிர்க் கட்சிகளுக்கு சவால் விட்ட முதல்வர் ஜெயலலிதா, நாளைவாக்குப் பதிவு நடக்கவுள்ள நிலையில், விரைவில் வீராணம் குடிநீர் வரவுள்ளதாகக் கூறுகிறார்.
தென் சென்னை தொகுதியில் கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா ஈடுபட்டார். மயிலாப்பூர், கோட்டூர்புரம், அடையார்ஆகிய பகுதிகளில் அவர் அதிமுக வேட்பாளர் பதர் சையத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க எனது அரசுகடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இதனால்இன்னும் சில நாட்களில் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் விரைவில் சென்னை நகருக்கு தண்ணீர் கிடைக்கும்.
புது வீராணம் திட்டம் தேவையில்லாதது, சாத்தியமில்லாதது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் உலக வங்கி இந்தத்திட்டத்திற்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்துள்ளது. ஒரு திட்டம் தவறு என்றால் உலக வங்கி பணம் கொடுக்குமா?என்றார் அவர். கோட்டூர்புரத்தில் தனது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications