மலேசிய சிறையில் இருந்த தமிழர்கள் மீட்பு: தமிழக அரசு
சென்னை:
மலேசியாவில் வேலைக்காகச் சென்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 67 தமிழர்கள் விடுவிக்கப்பட்டு, அதில் 10பேர் நாடு திரும்பிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை காரணமாக அவர்களை விடுவிக்க மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம்மூலமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
மலேசியாவுக்கு வேலை வாங்கித் தருவதாக தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 67 இளைஞர்கள்அங்கு ஒரு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு இன்னல்பட்டு வருவது குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா கடந்த மாதம் 12ம் தேதி கடிதம் எழுதினார்.
இந்த 67 இளைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைபடுத்தப்பட்டு வருவதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய முதல்வர், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கவும், ஒப்பந்தப்படி வேலையும் சம்பளமும் கிடைக்கஏற்பாடு செய்யுமாறும் கடிதத்தில் கோரியிருந்தார்.
இவர்களில் யாராவது நாடு திரும்ப விரும்பினால் அதற்கும் உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார் ஜெயலலிதா.
இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடந்த 29ம் தேதி தமிழக அரசுக்கு பதில் கடிதம்அனுப்பியுள்ளார். அதில், தமிழர்களை மீட்க மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து 10 தமிழர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டு திரும்ப தமிழகத்துக்குவந்துவிட்டதாகவும் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் மாற்று வேலைவாய்ப்பை ஏற்க சம்மதித்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களில் யாராவதுநாடு திரும்ப விரும்பினாலும் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சின்ஹா கூறியுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications