நாளை வாக்கு பதிவு: முன்னெச்சரிக்கையாக 2,000 ரெளடிகள் கைது
சென்னை:
தமிழகத்தில் நாளை ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2000 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட மொத்தம் 16 மாநிலங்களைச் சேர்ந்த 182 தொகுதிகளுக்கு நாளை இறுதிக் கட்டவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்மற்றும் பிற பொருட்கள் விநியோக மையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
வாக்குச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளை மிக மிக பதற்றம்கொண்ட தொகுதிகளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 300 சமூகவிரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் மூன்று தொகுதிகளையும் கண்காணிக்க சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை போலீசார் அமைத்துள்ளனர்.சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 15,000 போலீசார் ஒதுக்கபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் மத்திய,மாநிலப் போலீஸ் படைகள், துணை ராணுவப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications