வாக்காளர்களை அழைத்து வர டூ வீலர் சேவைக்கு தடை
சென்னை:
வாக்காளர்களை கார், வேன், பஸ், லாரிகளில் அழைத்து வர அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதித்திருந்த தேர்தல் ஆணையம், அந்தத் தடையை இரு சக்கர வாகனங்களுக்கும் நீடித்துள்ளது.
வாக்குச் சாவடி அடுத்த தெருவில் இருந்தாலும் கூட அம்மா, அய்யா வாங்க என்று கார்களில் ஏற்றிக்கொண்டு போய் இறக்கிவிடுவார்கள் நம் ஊர் அரசியல் கட்சியினர். காரில் போகும்போதே எங்ககட்சிக்கு மறக்கமாக ஓட்டு போடுங்க என்று நினைவூட்டுவார்கள்.
இந்த வாகன சேவைக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துவிட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான டூவீலர்களை அரசியல் கட்சிகள் களத்தில் இறக்க முடிவு செய்தன.
இந் நிலையில் டூ வீலர்களில் எந்தக் கட்சியினரானவது வாக்காளர்களை அழைத்து வந்தால், அந்த டூவீலர் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகள் அருகே வாகனங்களில் யாராவது வந்தால் போலீஸார் தடுத்து நிறுத்து கேள்விகளால்துளைத்தெடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications