மரங்களைக் காத்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்
டெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்தத் தேர்தலில் 8,000 டன்னுக்கும் அதிகமானகாகிதங்கள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், காகிதத்துக்காக அழிக்கப்பட இருந்த ஆயிரக்கணக்கானமரங்கள் தப்பியுள்ளன.
கடந்த 1996 வாக்குச் சீட்டுகள் தயாரிக்க தேர்தலில் 8,000 டன் காகிதம் பயன்படுத்தப்பட்டது. 1998 தேர்தலில்7,700 டன் காகிதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுகளுக்குப் பதிலாக 10.75 லட்சம்வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இயந்திரங்கள் எடை குறைவாகவும், அளவில் சிறியதாகவும் இருப்பதால் அவற்றைக் கொண்டு செல்வதுஎளிதாக இருக்கிறது. மேலும் வாக்குச் சாவடிகளில் தேவைப்படும் அலுவலர்களின் எண்ணிக்கையையும் இந்தஇயந்திரங்கள் குறைத்துள்ளன.
லட்சக்கணக்கில் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியும், அவற்றை பத்திரமாக வைத்திருக்கும் சிரமமும் இவற்றில்இல்லை. முறைகேடுகள் செய்யவும் முடியாது. வாக்குச் சாவடி அலுவலகர் ஒரு பட்டனை அழுத்தி விட்டால்,அடுத்து யாரும் வாக்குப் பதிவு செய்ய முடியாது.
முடிவுகளை 10 ஆண்டுகள் கழித்துக் கூட பார்த்துக் கொள்ளலாம். பேட்டரியாலும் இயங்க வைக்கலாம். இவைபழுதாவது மிக அரிதாகவே இருக்கிறது. ஓர் இயந்திரத்தில் அதிக பட்சமாக 3,840 வாக்குகளைப் பதிவுசெய்யலாம்.
உலகிலேயே முழுக்க முழுக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தல்இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.