வெற்றி உறுதி: வாக்களித்த பின் கருணாநிதி பேட்டி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் காலை வாக்களித்தனர்.
கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் கருணாநிதிதனது மனைவி தயாளு அம்மையாருடன் காலை 9.30 மணிக்கு வாக்களித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடரும். கூட்டணியைவிட்டு விலக மாட்டோம். முன்றாவதுஅணிக்கு வாய்ப்பே இல்லை. தொங்கு பாராளுமன்றம் ஏற்படுமா என்பதை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தான்சொல்ல முடியும் என்றார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் வந்துகோபாலபுரத்தில் வாக்களித்தார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது மனைவி பிரியாவுடன்அதே வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரவாகமக்கள் தெளிவான தீர்ப்பளிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதில் நம்பிக்கையாக உள்ளோம். எனவே,தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications