அரபிக்கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு மீண்டும் மழை?
சென்னை:
அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்துவருவதால் தமிழகத்தில் மீண்டும் மழை பொழியும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக நல்ல மழைபெய்தது. அக்னி நட்சத்திரத்தின் போது பெய்த இந்த மழையால், வெயில் கொடுமையில் இருந்து தமிழக மக்கள்தப்பினார்கள். நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு அதிகரித்தது.
வங்கக் கடலில் உருவான புயல் இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிக் கடலுக்கு இடம் பெயர்ந்தது. இதனால்தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லை.
இந் நிலையில், அரபிக் கடலில் கோவாவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த புயல்சின்னம் தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.