கூட்டணியில் அதிமுக இருப்பதால் விரைவில் ராமர் கோவில்: வி.எச்.பி
சென்னை:
அயோத்தியில் இந்த ஆண்டு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவது உறுதி என்று விசுவ இந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுக போன்ற இந்து விரோத கட்சிகள் போட்ட முட்டுக்கட்டைகளால் தான் கடந்த 5 ஆண்டுகளில் அயோத்திப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
இப்போது கூட்டணியில் இருந்த அந்த கட்சிகள் விலகிவிட்டன. வாஜ்பாய் தான் மீண்டும் பிரதமராக பொறுப்புஏற்க உள்ளார் என்பதும் உறுதியாகிவிட்டது.
பா.ஜ.க. கூட்டணி யில் அதிமுக இணைந்து விட்ட தால் அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்சுலபமாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா, இந்து மக்களுக்கு விரோதமாக எப்போதும் செயல்படமாட்டார். இந்தஆண்டுக்குள் கோவில் கட்டும் பணி தொடங்குவது உறுதி என்று கூறினார்.












Click it and Unblock the Notifications