ஆந்திர வெற்றி: சென்னையில் காங்கிரஸ் கொண்டாட்டம்
சென்னை:
ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதை சென்னை சத்யமூர்த்தி பவனில்ஜி.கே.வாசன் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சி அமைக்கவுள்ளது. இதையடுத்து சத்யமூர்த்தி பவனில்தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
அவர்களுடன் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசனும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்களுடன் சேர்ந்து அவரும்பட்டாசுகளைக் கொளுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், ஆந்திர மாநில முடிவுகள் தமிழகத்திலும் பிரதிபலிக்கும்.
மத்தியிலும்,மாநிலத்திலும் மதச்சார்பற்ற, மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் காங்கிரஸ் இயக்கத்தின்தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே ஆந்திர முடிவுகள் காட்டுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications