அமைச்சரை காப்பாற்ற அரசு முயற்சி: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவகாசி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மீது அமைச்சர் இன்பத் தமிழன் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்குதிமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அமைச்சர் இன்பத் தமிழனை கைது செய்யும் முயற்சியில் காவல்துறைஇறங்கியுள்ளதாகத் தெரியவில்லை. அவர்கள் அமைச்சரைக் காப்பாற்றவே கவனம் செலுத்துவார்கள். எனவே தேர்தல்ஆணையம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
எதிர்க்கட்சி வேட்பாளரை கொலை செய்யும் நோக்குடன் அமைச்சர் நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சிக்குரியது,கண்டனத்துக்குரியது, வேதனைக்குரியது என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications