நாளை திமுக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
சென்னை & டெல்லி:
அனைத்து கட்டத் தேர்தல்களும் முடிவடைந்து, மத்தியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்துக் கணிப்புகள்தெரிவிக்கும் நிலையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளைசென்னையில் நடக்கிறது.
அதே போல காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் 13ம் தேதி சோனியா காந்தி தலைமையில்டெல்லியில் நடக்கிறது.
கருத்துக் கணிப்புகளில் தமிழகம் மற்றும் புதுவையில் 31 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந் நிலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலையில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து இக் கூட்டத்தில்ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும், லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டது, சிவகாசியில் அமைச்சர் இன்பத் தமிழன் தொடர்பானசர்ச்சை ஆகியவை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு அண்ணாஅறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதால்,அனைத்துத் தலைவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications